Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை எய்ம்ஸ்: 3 மாதத்தில் சர்வதேச டெண்டர்

டிசம்பர் 14, 2019 09:00

மதுரை: மதுரை, தோப்பூர் எய்ம்ஸ் பணிக்கு, மூன்று மாதங்களில், சர்வதேச டெண்டர் அழைப்பு விடுக்கப்படும்,' என, சுகாதாரத் துறை முதன்மை செயலர் பீலா ரஜேஷ் தெரிவித்தார்.

மதுரையில், எய்ம்ஸ் திட்டத்திற்கு, கடன் வழங்கும் ஜப்பான் நிறுவனமான, 'ஜிக்கா' அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், அவர் கூறியதாவது:எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதர கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும். தோப்பூரில் நடத்திய ஆய்வு அடிப்படையில், ஜிக்கா நிபுணர்கள், எய்ம்ஸ்கான திட்ட மதிப்பீட்டை முழு வீச்சில் தயாரிக்கின்றனர்.

நாம் ஏற்கனவே, 1,264 கோடி ரூபாய் ஆகும் என கணித்திருந்தாலும், அவர்களின் முடிவே இறுதியானது. மூன்று மாதங்களில், மத்திய அரசிடம் திட்ட மதிப்பீட்டை தாக்கல் செய்து, கடன் வழங்க வாய்ப்புள்ளது. பின், சர்வதேச அளவில் டெண்டர் அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்